இந்தியாவில் தற்பொழுது அன் இன்ஸ்டால் வாட்ஸ்அப் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இந்த அன் இன்ஸ்டால் வாட்ஸ்அப் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆக காரணம் என்ன??
ட்விட்டரில் ‘RoflGandhi_’ காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பெயரில் போலி ட்விட்டர் அக்கவுண்ட் (Parody Account) ஒன்று இயங்கி வருகிறது. தற்பொழுது இந்த அக்கவுண்டில் இருந்து இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களான ஆனந்த் மஹிந்திரா ஆகிய இருவரது மொபைல் போன்களில் இருந்து வாட்ஸ் ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யக்கோரி பெட்டிஷன் ஒன்று ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
அந்த பெட்டிஷனில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால்:-
இந்தியாவின் மெகா ஸ்டார் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் வாட்ஸ்அப்களில் பகிரப்படும் போலி செய்திகள் மற்றும் கிண்டலான செய்திகளுக்கு இவர்கள் இருவரும் இறையாவதை (Falling Prey) தடுக்கும் பொருட்டும், இவர்களது கண்ணியத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்காகவும் இந்த பெட்டிஷன் மூலமாக வாட்ஸ்அப்-ன் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க்- க்கு இவர்கள் இருவரது வாட்ஸ்அப் அக்கவுண்டையும் அன் இன்ஸ்டால் (Uninstall) செய்யக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விஷயம் என்னவென்றால் ஆனந்த் மஹிந்திரா முதலில் தனது ட்விட்டர் பக்கத்தில். ஒரு பெண்மணி தனது குழந்தையுடன் இலையை முக கவசம் அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/04/IMG-20200427-WA0086-670x1024.jpg)
இந்த புகைப்படத்தை எடுத்தார் எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியாது ஆனால் இந்த புகைப்படம் ஒரு சிறந்த ஐகானிக் புகைப்படமாகவும் இந்த கொரோனா பரவலின் சிறந்த நினைவாகவும் இருக்கும் என்று. மேலும் இயற்கை நமக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து விட்டது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதைக்கண்ட பாலிவுட் காமெடி நடிகர் அதிதி மிட்டல்
ஆனந்த் மஹிந்திரா இது கொண்டாடுவதற்கான நேரமல்ல. மேலும் இலையை முக கவசமாக அணிவதன் மூலமாக நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று எந்த ஆய்வுகளும் நிரூபிக்கவில்லை. மேலும் இந்த புகைப்படம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது தானே தவிர யாரும் முகக் கவசங்கள் பதிலாக இலைகளை முக கவசம் அணியவில்லை என்று கிண்டல் செய்திருந்தார்.
இதையடுத்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார்.
இதேபோல இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது ‘ஜல்சா’ இல்லத்தில் வௌவால் ஒன்று உள்ளே நுழைந்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதில், கொரோனா வைரஸ் என்னை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார்.
இதை கண்ட நெட்டிசன்கள் இதுவரை கருணா பரவலுக்கு வவ்வால்கள் தான் கொரோனா பரவ காரணம் என்று எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை என்று கூறி அமிதாப்பச்சனை கிண்டல் அடிக்கத் தொடங்கினார்கள்.
இதேபோன்று மற்றொரு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அதுவும் தற்போது கிண்டல் ஆகி வருகிறது.