லைஃப் ஸ்டைல்

செந்தில் தொண்டமான் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய தமிழ்நாட்டு மக்கள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க கவுரவ தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்கள் இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்களுள் மிக முக்கியமானவர். இவர் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்காக தனது முழு பங்களிப்பையும் அளித்து கொண்டிருப்பவர்.

ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்த நாளை (அக்டோபர் 31) தமிழ்நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அதே போன்று இந்த வருடமும் செந்தில் தொண்டமான் அவர்களின் பிறந்தநாளை திருச்சியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினர் கேக் வெட்டியும், ஆள் உயர மாலை அணிவித்தும் மிக உற்சாகமாக கொண்டாடினார்கள்.

பின்னர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்க அமைப்பாளர்கள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினர். அதன்பிறகு அமைப்பாளர்கள் அனைவரும் செந்தில் தொண்டமான் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ALSO READ  சானிடைசரை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்...???இதை படியுங்கள்....

மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழாவில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க தலைவர் திரு.ஒண்டிராஜ், இளைஞரணித் தலைவர் திரு.ராஜேஷ், தேசிய அமைப்பாளர் திரு.ராஜா, இணைச்செயலாளர் திரு.சுந்தர் மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க அமைப்பாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாடித்தோட்டம் அமைக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இன்ப செய்தி!

Shanthi

பழங்குடி ஆடை, அணிகலனுக்கு மாறும் பெண்கள்

Admin

இனி ரூ.2000 கிடையாது – ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி

Admin