தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி உள்ளார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் இந்தாண்டு கட்சி தொடங்குவதற்கான ஆலோசனையும் இந்த கூட்டத்தில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களை அவர் புறக்கணித்த போதும் சட்டமன்ற தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.