தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வைகாசியில் இன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குஷ்பு, ஹோட்டல் ஒன்றில் தோசை சுட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அண்மைக்காலமாக பல்வேறு வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின்போது துணி துவைத்துக்கொடுப்பது, பரோட்டா சுடுவது, மீன் வறுப்பது போன்ற நூதன முறையைப் பின்பற்றி வருகிறார்கள். அந்த வரிசையில் குஷ்புவும் தற்போது இணைந்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.