குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்வது அதை மற்றவர்களுக்கு பகிர்வது ஆகிய செயல்களில் ஈடுபடுவோரை தமிழக காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
![](https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/01/harish005/img/625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg)
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். என்.சி.ஆர்.பி.யில் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் இளைஞர் ஹரீஷை காவல்துறையினர் கைது செய்தனர்.
![two youngsters watching video arrested police](https://image.nakkheeran.in/cdn/ff/QZaLRrSdm2dx49Or-BCQiQKpE6pT6o4EPngv3U-DY0E/1580311118/public/inline-images/arrested9.jpg)
இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரில் சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட புகாரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஃபி இஸ்லாம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
![NORTH INDIAN YOUNGSTER ARRESTED IN KARUR](https://image.nakkheeran.in/cdn/farfuture/o4eA-buTOAM3JH_ttRClUZk5KB7emCS7lo7k4AvEYyY/1580444751/sites/default/files/inline-images/YTYYYUYUY.jpg)
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் நியாஸ் அலி என்பவர் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து வருவதாக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தேசிய மையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தகவல் தொடர்பு குற்றப்பிரிவு மற்றும் போக்சோ சட்டப் பிரிவின்படி நியாஸ் அலியை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.