தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள காமராஜர் நகரில் கடல் அட்டை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஒரு குடோனில் இலங்கைக்கு கடத்த படுத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கடல் அட்டைகள் கடல் அட்டைகள் பதப்படுத்த தேவையான கேஸ் சிலிண்டர், அடுப்பு பாத்திரங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கிருந்த தென்காசியை சேர்ந்த மணிக்கிரீவன் என்பவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.