தமிழகம்

சசிகலா இன்று விடுதலை ; கவலையில் அதிமுக தலைவர்கள் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் தண்டனை காலம் (இன்று) 27-ந் தேதி உடன் முடியவுள்ள நிலையில் தற்போது அவரை விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், விக்டோரியா அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். 

ALSO READ  இறந்து கிடந்த முதியவர்; பிளீச்சிங் பவுடர் தெளித்த மாநகராட்சி ஊழியர் !

சிறைத்துறைக் கண்காணிப்பாளர் லதா தலைமையிலான போலீசார், சசிகலாவிடம் கையெழுத்து பெற்ற நிலையில், தற்பொழுது சொத்துகுவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை முடிவு பெற்றதற்கான ஆவணங்களை சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.சசிகலா சிகிச்சை பெறும் விக்டோரியா மருத்துவமனையில் டி.டி.வி.தினகரன், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா, செந்தூர் பாண்டியன் ஆகியோர் உள்ளனர். 

விடுதலையாகும் சசிகலாவைக் காண வெளியே அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் குவிந்துள்ளனர். விடுதலை செய்யப்பட்டாலும் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருப்பதால் பிப்ரவரி முதல் வாரத்தில்தான் சசிகலா சென்னை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் அதிமுக தலைவர்கள் சிலர் கவலையிலும், பலர் சந்தோஷத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளிநாட்டிலிருந்து கரூர் திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

பிரான்ஸ் அதிபர் இமானுவேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அவரது புகைப்படத்தை ஒட்டியதால் பரபரப்பு:

naveen santhakumar

கொரோனா நோயாளிகளின் உணவு தேவைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் !

News Editor