தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மதுரை:-
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க 18 வகையான மூலிகை மருந்துகளை திருடியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200724-WA0015-1024x567.jpg)
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியிலுள்ள கடையின் பூட்டை உடைத்து நபர் ஒருவர் ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் கடையில் இருந்த 18 வகையான மூலிகை பொருட்களை திருடியுள்ளார்.
கடையின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையன், பொருட்களை சாக்குமூட்டையில் கட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், கடையில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200724-WA0014.jpg)
கடையில் திருடியவர் பாலமேடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. மேலும், கொரோனா பரவலை தடுக்க 18 வகையான மூலிகை மருந்துகளை திருடியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.