தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான செலவை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கண்ணைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா அரசு கொரோனா பெரும் தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான முழு செலவையும் மத்திய பாஜக அரசே ஏற்க வேண்டும். தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.
தமிழகத்திற்கு உயிர்காக்கும் ஆக்சிஜன் தடுப்பு மருந்துகளை கூடுதலாக அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து வண்ணாரப்பேட்டை காங்கிரஸ் அலுவலகம் முன்பு கண்களை கட்டி நூதன முறையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.