தமிழகம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரசு மேல்நிலை பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்டு உயர்கல்வி வழிகாட்டுதல் குழு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11ஆம் வகுப்பிற்கும், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்விக்கும் செல்லவேண்டும் என்பதற்க்காக தமிழக அரசு சார்பில்பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள்,11ஆம் வகுப்பில் என்னென்ன பாடப்பிரிவுகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும், அதேபோல, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும் முக்கிய பாடப்பிரிவுகள் வாரியாகவும் ,வீடியோ வாரியாகவும் தயாரித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்டு குழு உயர்கல்வி வழிகாட்டுதல் குழு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளது என்பதையும், எந்த பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தால், பின்னாளில் எந்தெந்த வேலைக்கு செல்லமுடியும் என்பது பற்றிய விரிவான தகவல்களையும் எடுத்துரைக்கவேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.


Share
ALSO READ  கொரோனாவை தொடர்ந்து தமிழகத்தை மிரட்டும் கருப்பு பூஞ்சை நோய்  !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீட் தேர்வு: மேட்டூர் அருகே மாணவன் தற்கொலை

News Editor

தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்:

naveen santhakumar

சிறுமியின் வயிற்றில் அரை கிலோ முடி அதிர்ந்து போன மருத்துவர்கள்

Admin