தமிழகம்

கொரோனாவை தொடர்ந்து தமிழகத்தை மிரட்டும் கருப்பு பூஞ்சை நோய்  !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் Mucormycosis என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும். இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய் தான் என்றாலும் குணப்படுத்தப்படக்கூடிய நோய் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு  அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்ளிட்ட 9 நபர்கள்  கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர். சிகிச்சை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இதனால் இதுவரை உயிரிழப்பு இல்லை. சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.

ALSO READ  புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால், பிரிட்டன் - இந்தியா இடையே வினமா போக்குவரத்து நிறுத்தம் !

இந்த கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் ராஜஸ்தானில் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த பாதிப்பை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

#Breaking தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு!

naveen santhakumar

வேதாரண்யத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்….ஒருவழியாக அனைத்து குற்றவாளிகளும் கைது….

naveen santhakumar

புலி வேட்டையில் இறங்கிய நாட்டுநாய்…!

News Editor