சென்னை:- சென்னை ஐ.ஐ.டி.-ல் நடைபெறும் நிகழ்ச்சிக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தர உள்ளதால் மாணவ, மாணவியர் கருப்பு நிற உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ‘2020 – 2030 வரை இந்தியா’ ( ‘India 2020 to 2030: Gen Y’s vision for the decade’ ) என்ற தலைப்பில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றுவதோடு, மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
இதில் பங்கேற்பவர்கள் கறுப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரி பேக்குகளை, வீடியோ, புகைப்படம் எடுக்கவும் தடை விதித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தவிர, மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு கருவிகள் கொண்டுவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன் ஐ.ஐ டி. ன் கிரிஷ்ணா கேட்-ஐ அடைத்து மாணவர்கள் கறுப்பு உடைகள் அணித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ஐ.ஐ.டி. நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.