சென்னை:- சென்னை ஐ.ஐ.டி.-ல் நடைபெறும் நிகழ்ச்சிக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தர உள்ளதால் மாணவ, மாணவியர் கருப்பு நிற உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200229-WA0054.jpg)
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ‘2020 – 2030 வரை இந்தியா’ ( ‘India 2020 to 2030: Gen Y’s vision for the decade’ ) என்ற தலைப்பில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றுவதோடு, மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200229-WA0055.jpg)
இதில் பங்கேற்பவர்கள் கறுப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரி பேக்குகளை, வீடியோ, புகைப்படம் எடுக்கவும் தடை விதித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200229-WA0058.jpg)
தவிர, மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு கருவிகள் கொண்டுவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200229-WA0057.jpg)
இரண்டு மாதங்களுக்கு முன் ஐ.ஐ டி. ன் கிரிஷ்ணா கேட்-ஐ அடைத்து மாணவர்கள் கறுப்பு உடைகள் அணித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ஐ.ஐ.டி. நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200229-WA0052.jpg)