தமிழகம்

சென்னை ஐ.ஐ.டி-ல் மாணவர்கள் கருப்பு நிற உடைகள் அணிய தடை விதிப்பு……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:- சென்னை ஐ.ஐ.டி.-ல் நடைபெறும் நிகழ்ச்சிக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தர உள்ளதால் மாணவ, மாணவியர் கருப்பு நிற உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ‘2020 – 2030 வரை இந்தியா’ ( ‘India 2020 to 2030: Gen Y’s vision for the decade’ ) என்ற தலைப்பில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றுவதோடு, மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

இதில் பங்கேற்பவர்கள் கறுப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரி பேக்குகளை, வீடியோ, புகைப்படம் எடுக்கவும் தடை விதித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ALSO READ  கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு - அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது…! 

தவிர, மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு கருவிகள் கொண்டுவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஐ.ஐ டி. ன் கிரிஷ்ணா கேட்-ஐ அடைத்து மாணவர்கள் கறுப்பு உடைகள் அணித்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஐ.ஐ.டி. நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

ALSO READ  சென்னையில் 2015-ஐ விட 10 மடங்கு அதிக மழைக்கு வாய்ப்பு… 

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்; முதல்வர் எச்சரிக்கை !

News Editor

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைப்பு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு….

naveen santhakumar

‘உன்னால ஒன்னும் புடுங்கமுடியாது’ – ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கை விசாரிக்கும் நீதிபதியை ஒருமையில் பேசிய போலீஸ்… 

naveen santhakumar