தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கோவை சின்னவேடம்பட்டியில், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய,100 படுக்கைகள் கொண்ட தனியார் நிறுவனமான CRI அறக்கட்டளையின், “கொரோனா பெருந்தொற்று நோய் சிகிச்சை” மருத்துவமனையை, உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில், மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா. கார்த்திக், சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி மற்றும் சிஆர்ஐ பம்ப் நிறுவனத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.