தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விருத்தாசலம் பாலக்கரை அம்பேத்கர் சிலை அருகே தமிழ்த்தேசிய பேரியக்கம், CP. M.L, மக்கள் விடுதலை, RMPI, தமிழ் தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட்ட செயலாளர் அசோக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மக்களின் சுவாசக் காற்றில் நஞ்சு கலந்த நாசகார ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு, அழிவினை செயல் திட்டங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும்  தற்போது மத்திய மாநில அரசுகள், எதிர் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் துணை போயுள்ளது.

ALSO READ  ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்; மோடி வாழ்த்து !

மக்களின் உயிரைக் குடித்த ஸ்டெர்லைட் விஷ தொழிற்சாலைக்கு துணை போன கட்சிகளின் செயல்கள் மிகவும் கண்டனத்துக்குரியது. தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் என சுமார் 82 தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் ஸ்டெர்லைட்டின் ஒற்றை நிறுவனத்தின் திறப்பதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தகைய கட்சிகள் செயல்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்களின் உணர்வுகளால் முன்னெடுக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது அதனை சதித்திட்டங்களால் முறியடிக்க நினைக்கும் மத்திய, மாநில கட்சிகளின் செயல்கள் யாவும் வீழ்ந்தே போகும். என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ALSO READ  நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் ஆர்யா திரைப்படம் !

RMPI மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்ணன் சிபிஎம் எம் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் ராமர் தமிழ் தேசிய பேரியக்கம் தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ராஜேந்திரன் மக்கள் அதிகாரம் விநாயகம் ராமலிங்கம் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

10,12 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Shanthi

ரேஷனில் இரண்டாவது தவணை வழங்கல்….

Shobika

பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

News Editor