புகழ்பெற்ற கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் (Kobe Bryant) உள்ளிட்ட 9 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/baef09a4-2194-45da-b1fd-075cb07235d4-1-1024x1012.jpg)
கூடைப்பந்து போட்டியில் உலக அளவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் நியூயார்கின் லாக்கர்ஸ் அணியின் முன்னாள் வீரர் கோப் பிரைன்ட். 5 முறை NBA சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/182bc561-5174-466e-9b2a-b7752ee188cd-1024x988.jpg)
இவர் சில காரணங்களால் 2016ம் ஆண்டு சர்வதேச கூடைப்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/e674b6f1-3f47-4e8f-9d9a-143e2568aeeb-1024x1013.jpg)
கோப் ஹெலிகாப்டரில் பயணம் செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தார். சிக்ரோஸ்கி எஸ் 76 என்ற ஹெலிகாப்டரை அவர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று கலிபோர்னியாவில் இருக்கும் ஒரு கல்லூரிக்கு பயிற்சியாளராக தனது 13 வயது மகளுடன் சென்று கொண்டிருந்தார்.
![Image result for கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலி](http://img.polimernews.com/uploads/web/images/moriginal/1580087774692.jpeg)
அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமைதான் லிபிரான் ஜேம்ஸ் என்ற மற்றொரு வீரர் அவர் சாதனையை முறியடித்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/5fdd3e3c-a8ff-4b5d-adcf-709aa0f1f138-1024x660.jpg)
கோப் பிரயன்ட்டின் மரணச் செய்தி அறிந்து அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/1545b6fc-1c04-4a0a-abf9-9dbcee232fe7-1024x625.jpg)
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் இது மிகவும் பயங்கரமான செய்தி என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோப் பிரைன்ட் மற்றும் அவரின் மகளின் மரணத்திற்கு விளையாட்டு வீரர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கோப் பிரைன்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தி ட்விட்டரில் பலரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.