ருமேனியா பிரதமர் லுடோவிக் ஒர்பான் கொரோனா வைரஸ் சந்தேகம் காரணமாக தன்னை தானே தனிமைபடுத்தி உள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200315-WA0002.jpg)
ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் லுடோவிக் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி ஒருவருக்கு கொரோரா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200315-WA0006.jpg)
இதையடுத்து அந்த எம்பி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தனக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதி தன்னைத்தானே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி கொண்டுள்ளார் பிரதமர் ஒர்பான்.
இதுகுறித்து கூறிய பிரதமர் ஒர்பான்:-
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200315-WA0001.jpg)
நான் அமைச்சர்கள், எம்பிக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்பி ஒருவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் என்னை நானே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி கொண்டுள்ளேன். எனது பிரதமர் பணியை வில்லா லேக் 1-ல் இருந்து நான் தொடரப் போகிறேன் என்றார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200315-WA0007.jpg)
இதனிடையே லுடோவிக் ஒர்பான் ருமேனியாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ருமேனியாவில் இதுவரை இரண்டாயிரம் பேர் மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனினும் இதுவரை 70 பேருக்கு தான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200315-WA0004.jpg)
இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் வரை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200315-WA0005.jpg)