கொழும்பு:-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவரும் இலங்கையின் முன்னாள் அமைச்சருமான திரு ஆறுமுகன் தொண்டமான் மறைவிற்கு பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200603-WA0134.jpg)
இந்நிலையில் அவர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் அவர்கள் எழுதியுள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200603-WA0029-rotated.jpg)
அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
இலங்கை மத்திய அமைச்சராகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்த கௌரவ திரு ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு செய்தி அறிந்து தாங்கள் அனுப்பிய இரங்கல் செய்தி எங்களுக்கு வந்து சேர்ந்தது. துயரமான நேரத்தில் எங்களின் துக்கத்தில் நீங்கள் பங்கெடுத்தது மிகவும் ஆறுதலாக இருந்தது. கௌரவ அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பியதற்கு எனது நன்றிகள்.
அன்புடன்
செந்தில் தொண்டமான்,
பிரதமரின் இணைப்புச் செயலாளர்,
இலங்கை.
செந்தில் தொண்டமான் நன்றி கடிதம் எழுதியவர்கள் பட்டியல்:-
பிரதமர் திரு. நரேந்திர மோடி,
திரு. எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர்,
திரு. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வர்,
திரு. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர், திமுக தலைவர்,
திரு. விஜயகாந்த் தலைவர், தேமுதிக தலைவர்,
திரு.திருநாவுக்கரசர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக காங்கிரஸ் கமிட்டி,
திரு. கந்தசாமி, அமைச்சர், சமூகநலத்துறை, புதுச்சேரி,
திரு.டிடிவி தினகரன் பொதுச் செயலாளர், அமமுக,
திரு. ராமதாஸ் நிறுவனர், பாமக,
திரு.அன்புமணி இளைஞரணித் தலைவர், பாமக,
திரு வைகோ மதிமுக பொதுச் செயலாளர்,
திரு. ஜி.கே.வாசன் தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்,
திரு. சீமான் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்,
திருமதி. கனிமொழி மக்களவை உறுப்பினர்,
திரு.திருமாவளவன் MP, விடுதலை சிறுத்தைகள் கட்சி,
திரு கி.வீரமணி திராவிடர் கழகம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.