லண்டன்:-
லண்டனைச் சேர்ந்த நல்ல ஆரோக்கியமான உடல் நலம் உள்ள உபர் ஓட்டுனர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/04/IMG-20200412-WA0109.jpg)
லண்டனின் தெற்குப் பகுதியான நோர்வூட் பகுதியைச் சேர்ந்தவர் அயூப் அக்பர் (33) (Ayub Akhtar). இவர் கடந்த வெள்ளியன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/04/IMG-20200412-WA0105.jpg)
அயூப் அக்பரின் பெற்றோர் பாகிஸ்தானின் செக்ஸ்வாரி (Chekswari) பகுதியை சேர்ந்தவர்கள். அக்பர் டாக்ஸி ஓட்டுனர் என்பதோடு அவர் ஒரு சமூக ஆர்வலரும் ஆவார்.
லண்டன் போக்குவரத்துதுறை மற்றும் லண்டன் மேயர் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கான வரி விதிப்பு மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு எதிராக தனியார் நிறுவன கார் ஓட்டுநர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியவர் அயூப் அக்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வாகனத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தொடர்ந்து இருமியுள்ளார். இதுகுறித்து தனது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளார் அக்பர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/04/IMG-20200412-WA0108.jpg)
இதையடுத்து சில தினங்களில் அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தெற்கு லண்டனில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் (St. George Hospital) அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தனது குடும்பத்தினருக்கும் மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த செய்தியில் “எனக்கு பயமாக உள்ளது, எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/04/IMG-20200412-WA0107.jpg)
இதுகுறித்து அக்பரின் சகோதரர் யாஸர் அக்தர் (Yasser Akthar) கூறுகையில்:-
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/04/IMG-20200412-WA0106.jpg)
கடந்த சில தினங்களுக்கு முன்பாக எனது சகோதர்-ன் வாகனத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தொடர்ந்து இருமிதாக எங்களிடம் கவலையுடன் கூறினார். இதையடுத்து தன்னைத் தானே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டார் அக்பர், தொடர்ந்து மிக கடுமையான வரட்டு இருமல் அவருக்கு ஏற்பட்டது. இதனால் இரவெல்லாம் தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். அக்பர் இதையடுத்து சில தினங்களில் அவருக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தெரிய வந்ததையடுத்து. மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றார்.
எனினும், இவரது இறுதிச் சடங்கு எப்பொழுது நடைபெறும் என்று தெரியவில்லை.