தமிழகம்

மதுரையில் பைக்குகளை திருடிய பாதிரியார் கைது…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

மதுரை தனக்கன்குளம் பர்மாகாலனி பகுதியில் உள்ள கிறிஸ்டியன் பிரதர்ஸ் அசெம்பிளி சர்ச் என்கிற தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் விஜயன் சாமுவேல் (36). 

மதுரை சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி, திருமங்கலத்தில் அடுத்தடுத்து டூவீலர்கள் திருடுபோயின. இந்நிலையில் டூவீலர்களை திருடி அடமானம் வைத்தார் என்ற குற்றத்திற்காக பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து 11 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் பாதிரியாருக்கான படிப்பை முடித்தவர் சாமுவேல். தனக்கன்குளத்தில் ஊழியம் செய்து வந்தார். இந்நிலையில் இதற்காக வெளிநாடுகளில் இருந்து தரப்பட்ட நிதி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் டூவீலர்களை திருடி தலா ரூ.10 ஆயிரத்திற்கு அடமானம் வைத்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் டூவீலர் ஒன்றை பைபாஸ் ரோடு மெக்கானிக்கிடம் சர்வீஸ் செய்ய கொடுத்துள்ளார். அப்போது சாமுவேல் வண்டி குறித்த விவரங்களை முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து டூவீலர் மெக்கானிக் பாதிரியார் சாமுவேலின் அலைபேசி எண், ஆதார் அட்டை நகலை மெக்கானிக் வாங்கிக்கொண்டார். டூவீலரில் இருந்த ஆவணங்களை மெக்கானிக் பார்த்தபோது, அது வேறு ஒருவடையது எனத்தெரிந்தது. அதில் இருந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். டூவீலர் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சாமுவேல் கைது செய்யப்பட்டார். 

ALSO READ  தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் - உச்சக்கட்ட உஷாரில் தமிழகம்

சாமுவேலை கைது செய்த சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரியா, எஸ்.ஐ., ஜெய்சங்கர் தலைமையிலான போலீசாரை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செம்பரப்பக்கம், புழல் ஏரிகள் திறப்பு…!

News Editor

சிறுவனுடன் சிறுமி ஓட்டம்…..செல்போன் சிக்னலை வைத்து டிராக் செய்து மடக்கி பிடித்த சிறுமியின் தந்தை….

naveen santhakumar

ஐயோ செம க்யூட்… எமி வித் பேபி..

Admin