உலகம்

Ph.D மாணவி விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் லீஜா ஜோஸ்(28). இவர் தென் கொரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஆராய்ச்சி மாணவியாக படித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் விடுமுறை காரணமாக கேரளா வந்துள்ளார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக தென்கொரியா செல்ல முடியவில்லை.

ALSO READ  அய்யோ!!!!!!இந்த இயக்குநர் வீட்ல இப்படி ஒரு துக்கமா?????

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தென் கொரியா சென்றுள்ளார். இதனால், லீஜா ஜோஸ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது, லீஜாவிற்கு காதில் வலி மற்றும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தனிமைப்படுத்துதல் முடிந்து பிறகு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.பின்னர், மீண்டும் கேரளாவிற்கு திரும்ப முடிவு செய்து, கடந்த வியாழக்கிழமை அன்று மாலை விமான நிலையம் சென்றுள்ளார்.

ALSO READ  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து

அப்போது, விமான நிலையத்திலே லீஜா ஜோஸ் சுருண்டு விழுந்துள்ளார். அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடும் நெருக்கடி : குழந்தைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்

News Editor

முக்கிய ஆவணங்களில் கிம் கையெழுத்திட வில்லை… வடகொரியாவில் அதிகாரம் செலுத்தும் சகோதரி…

naveen santhakumar

இலங்கையில் தமிழர்கள் எழுச்சி போராட்டம்:

naveen santhakumar