31.டிசம்பர் இன்று தாமஸ் ஆல்வா எடிசனால் டங்ஸ்டன் இழை பல்பை கண்டுபிடிக்கப்பட்ட தினம்.
மின்விளக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. 1811 இலேயே ஹம்பிரி டேவி என்பார் இரண்டு மின் முனைகளுக்கிடையே மின்சாரம் பாயும்போது ஒளி உண்டாவதைக் கண்டு பிடித்தார். 1879 இல் கார்பன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை தாமஸ் ஆல்வா எடிசனுக்கு கிடைத்தது. ஆரம்ப காலங்களில், 1879 தொடக்கம் 1905 வரை இந்த நுண்ணிழைகள் பெரும்பாலும் கார்பனினாலேயே செய்யப்ட்டன.பின்னர் இது உலோகத்தினால் செய்யப்பட்டது. இக்காலத்தில் டங்ஸ்டன் உலோகமே இதற்கு பயன்படுகின்றது.நுண்ணிழையூடு மின்சாரம் பாயும்போது அது சூடாகி ஒளிர்கின்றது.இக்காலத்தில் டங்ஸ்டன் இழை விளக்கு தடை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.