இயக்குநர் டிகே தமிழில் “யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கியள்ளார். அவர் இயக்கிய இருபடங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது காட்டேரி என்ற ஒரு புதிய படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக வைபவ் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ஆதமிகா நடித்திருக்கிறார்.
அதனையடுத்து படத்தின் முக்கய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், கருணாகரன் சோனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தினை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது
காட்டேரி படத்தின் அணைத்து பணிகளுமே முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா நெருக்கடி காரணமாக திட்டமிட்டபடி படத்தை திரையரங்கில் வெளியிட முடியவில்லை. ஆகையால் படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பாலா ஓடிடி தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டாததால், காட்டேரி படத்தினை திரையரங்கில்வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியிடுவதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்திருந்தது. அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் காட்டேரி படம் கொரோனா இரண்டாம் அலை உருவாகியுள்ளதால் படம் வரும் டிசம்பர் 25 ம் தேதி வெளியாகாது, என்றும் படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.