இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (88) சிறுநீராக தொற்று மற்றும் வயது மூப்பின் காரணமாக சில நாட்களுக்கு முன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவசர சிகிச்சைப்பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவந்த நிலையில் தமிழக சுகாதாரதுறை செயலர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் நேரில் வந்து பார்த்துச் சென்றனர். அதனையடுத்து நேற்று காலை 10.05 மணி அளவில் சிகிச்சை பலனின்றி வயதுமூப்பின் காரணமாக அவர் உயிரிழந்தார்.
மறைந்த தா.பாண்டியனின் உடலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்றும் சமூக வலைதளங்கள் மூலமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.இந்நிலையில் தற்பொழுது அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரை உசிலம்பட்டியில் உள்ள வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.