அரசியல்

திமுக 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டது ; ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகிறது.  அந்த வகையில் போடிநாயகனுர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக மீண்டும் போட்டியிடும் அமைச்சர் பன்னீர்செல்வம் பழனிசெட்டிபட்டிபகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். 

ALSO READ  பிரியங்கா காந்தியின் தமிழக பிரச்சாரம் ரத்து !

அப்போது பேசிய அவர், பெண்கள் மற்றும் ஏழைகளுக்காக அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த கால தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றியதாக கூறினார். மேலும் தற்போது அதிமுக அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சி காலத்தில் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கைதிகளுக்கு கை,கால் முறிவு, டி.எஸ்.பி.,க்கள் விசாரணை…

Admin

டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் புகுந்து பாமகவினர் அத்துமீறல்

Admin

பாஜகவிற்கு மரண அடி கொடுத்த மக்கள்; திருமாவளவன் பேச்சு !

News Editor