இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாகி வருகிறது.
தொற்று பரவலை தடுக்க மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அடுத்தடுத்து பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரையின் படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சில தினங்களை என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.