இந்தியா

கொரோனா பரவல்; திமுக சார்பில் கபசுர குடிநீர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா முழுவதும் தொடக்கத்தில் அதிகரித்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரிக்க தொடங்கியுள்ளது.  நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது, குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

ALSO READ  9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு..!


இதனையடுத்து தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிரது அந்த வகையில் திமுகவின் சார்பாக கபசுர நீர் வழங்கப்படுகிறது. அந்தவகையில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு, மல்லாங்கிணர் ஆகிய பகுதிகளில் திமுக சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கப்பட்டது.


தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், திமுக கழகத் தலைவர்  ஆணைக்கிணங்க, விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு ஆலோசனைப்படி காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளில்  பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர், முகக்கவசம்  வழங்கப்பட்டது. இதில்  கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடத்தல்காரர்களிடம் சண்டையிட்டு போராடி மகளை மீட்ட தாய்! வீடியோ உள்ளே…

naveen santhakumar

+2 மாணவர்களுக்கு செல்போன் வாங்க ருபாய் 1000 வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு

News Editor

ஜூன் 8 முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட் திறப்பு: புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..

naveen santhakumar