தமிழகம்

கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு நீர் மோர்  விநியோகம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இராஜபாளையம் நகரம் மற்றும் , ஒன்றிய பகுதிகளில்  கோடைகால வெப்பத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர்,மோர் பழவகைகள் வழங்கும் நிகழ்ச்சியை பால்வளத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி  பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் அதிகரித்து வரும் கோடைகால வெப்பத்தை சமாளிக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி உணவு பொருள்களான கபசுரக் குடிநீர் மற்றும் இளநீர்  மற்றும் பல்வேறு வகையான பழ வகைகள்  அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து நகர் பகுதியில் பழைய பேருந்து நிலையம், முடங்கியார் சாலை, தென்காசி சாலை மற்றும் சேத்தூர், செட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி   பொதுமக்களுக்கு   வழங்கி துவக்கி வைத்தார்..

ALSO READ  காரை விற்று காற்று(ஆக்சிஜன்) கொடுத்த நெகிழ்ச்சி மனிதர் !

 
ஏராளமான பொதுமக்கள் கோடைகால தாகத்தைத் தீர்க்க பழவகைகள், இளநீர் வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் உடன் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை முருகேசன்,  பொதுக்குழு உறுப்பினர் எஸ்‌.என் பாபுராஜ், உள்ளிட்ட
 நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை குஷ்பூ அமைச்சரை சந்தித்து வேண்டுகோள்….

naveen santhakumar

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா… டென்ஷனான விஜய் சேதுபதி- காரணம் என்ன??

naveen santhakumar

துவக்கப் பள்ளிகள் மற்றும் நடு நிலை பள்ளிகள் திறப்பது குறித்து செப்.,8க்கு பின்பு முடிவு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

News Editor