சினிமா

ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் கார்த்தி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆத்திகரித்து வருகிறது.

தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிக அளவில் பரவி வருகிறது.  வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை  மத்திய மாநில அரசுகள் எடுத்து  வருகிறது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி இன்று (25.05.2021) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் நடிகர் கார்த்தியின் பிறந்தநாளுக்கு வலது தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

ALSO READ  அப்பா வாழ்ந்த  காட்டில் பணப்புதையல் இருக்கிறது; வீரப்பன் மகள் விஜயலட்சுமி!

அதில்.. “அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம். இந்தக் கரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவிற்கு மிகக் கடுமையாக உள்ளது. அரசாங்கமும் மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், வசிப்பிடத்தைவிட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தி ட்விட்டரில் பகிர்ந்த இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இணையதள தொடரில் நடிகர் வடிவேலு…

Admin

“ஆர்.ஆர்.ஆர்” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு :

Shobika

ஸ்விமிங் போட்டோஸ் வெளியிட்ட ப்ரணிதா.

naveen santhakumar