தமிழகம்

கோவையில் அதிகரிக்கும் கொரோனா; திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  நாளை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், கோவை மாநகராட்சியின் சார்பில், மாவட்டத்தில், மேற்கொண்டு வரும் கொரோனா நடவடிக்கைகள், மற்றும் புகார்கள் குறித்து கேட்டறிய, திடிர் ஆய்வு மேற்கொண்ட, கோவை மாவட்ட கொரோனா தடுப்பு பொருப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சக்கரபாணி, மற்றும், ராமசந்திரன் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார், 

அப்பொழுது, மாநகராட்சியின், சார்பில் தனிமைபடுத்தப்பட்ட இடங்கள், மற்றும் மாநகராட்சியில் நடமாடும் காய்கறி விநியோம் சீராக உள்ளதா என்பது குறித்தும் விசாரனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்…நேற்றைக்கு தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில், சுகாதார துறை அமைச்சர், கோவை மாவட்டத்தில் உள்ள, அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைக்கும் சென்று பரிசோதனை செய்ததாகவும், இதனை  தொடர்ந்து, மாவட்ட ஆட்சிய  அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து ஒரு ஆய்வு கூட்டம் நடத்தியதாகவும், தெரிவித்தார், 

ALSO READ  தீபாவளியைப் பாதுகாப்புடன் கொண்டாட காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு அறிவுரை

இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்றை கட்டுபடுத்த, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக புதிய ஆணையராக, சித்திக் அவர்களை நியமித்து உள்ளதாகவும், தெரிவித்தார்.

மேலும் நாளை தமிழக முதல்வர் இங்கு ஆய்வு நடத்த உள்ளதாகவும், அனைத்து துறை அதிகாரிகளையும், அழைத்து நாளை ஆய்வு கூட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார், மேலும், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக கோவை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றதாகவும், தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயம்:

naveen santhakumar

தளர்வுகளற்ற ஊரடங்கு; ரேஷன் கடைகளுக்கு அனுமதி !

News Editor

என்னை கொன்றுவிட்டு நீ சந்தோஷமாக இரு… மனைவி சொன்னதை அப்படியே செய்த கணவன்!!

Admin