இந்தியா

ஆந்திராவில் போலி கோழி முட்டை – பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நெல்லூர்

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு மண்டலத்தில் போலி கோழி முட்டை விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது.

ஒரு மினி வேனில் வியாபாரி ஒருவர் கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு கிராமத்திற்குள் வந்து விற்பனை செய்துள்ளார். 30 முட்டைகள் ரூபாய் 130 க்கு வழங்கியுள்ளார். ஒவ்வொருவரும் தேவைக்கு அதிகமாக முட்டைகளை வாங்கி குவித்தனர்.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கை நீட்டித்த மாநில அரசு !
Plastic Eggs: ஒரு மணி நேரமாகியும் வேகாத முட்டை...பிளாஸ்டிக் முட்டையால்  ஏமாந்த கிராமம் | Plastic Eggs In Nellore District Andhra Pradesh– News18  Tamil

இதனால், ஒரே மணி நேரத்தில் அனைத்து முட்டைகளையும் விற்றுவிட்டு அந்த முட்டை வியாபாரி அந்த ஊரை விட்டு சென்றுவிட்டார்.

பொதுமக்கள் வீடுகளில் வேக வைக்கவும், ஆம்லெட் போட்டு சாப்பிடவும் தயாரானார்கள் ஆனால் முட்டைகள் உடையவில்லை.

ALSO READ  பதப்படுத்தப்பட்ட கரு மூலம் குழந்தை பெற்றெடுத்த தம்பதி :

முட்டையை பரிசோதனை செய்ததில் பிளாஸ்டிக் முட்டை போல் இருந்துள்ளது. இதனால், அனைவரும் ஒருசேர முட்டை வியாபாரியால் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தது அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து வரிகுண்டபாடு போலீஸ் நிலையத்தில் அந்த முட்டை வியாபாரி மீது கிராம மக்கள் ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேசிய விளையாட்டு விருது வழங்கும் தேர்வு குழுவிற்கு தமிழர் தேர்வு!… 

naveen santhakumar

மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் 1000 ரூபாய் அபராதம்…..

naveen santhakumar

ஹேப்பி நியூஸ் – ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் – முதல்வர் அறிவிப்பு !

naveen santhakumar