பொதுவாக தியானம் செய்பவர்கள் மேற்கொள்ளும் ஒரு எளிமையான முத்திரை சின்முத்திரையே ஆகும்.
சிறப்புகள்:
1. மன அழுத்தத்தை குறைத்து மனதிற்கு அமைதியை தரும்.
2.மறதியை போக்கி நியாபகச் சக்தியை அதிகரிக்கும்.
3.மூளைக்கு சக்தி அளிக்கும்.
4.நிம்மதியான தூக்கம் வரும்.
5.கோபம் குறையும்.
செய்முறை:
• தரையில் விரிப்பு விரித்து பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். அல்லது நாற்காலியிலும் அமரலாம்.
• முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொள்ளவும்.
• கையில் உள்ள கட்டை விரலால் ஆள் காட்டி விரலின் நுனியை தொட்டு லேசான அழுத்தம் கொடுக்கவும்.
• மூச்சு உள்ளே செல்வதையும் வெளியே செல்வதையும் கவனிக்கவும்.
• மற்ற மூன்று விரல்களும் தரையை நோக்கி நேராக இருக்க வேண்டும்.
• இரண்டு கைகளையும் முழங்கால் மீது வைத்து கொள்ளவும்.
• மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விடவும்.
தினமும் தவறாமல் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.தினமும் 15 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை இப்பயிற்சியை செய்யலாம். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் செய்யலாம்.
(தொடரும்)
எஸ்.ராஜலெஷ்மி