இந்திய அணியில் ஜடேஜா விளையாடுவதை எந்த அணிகளும் விரும்பவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்திய அணி வீரர் ஜடேஜா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் இங்கிலாந்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் பின்னணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஜடேஜா, மீண்டும் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா காயம் காரணமாக வெளியேற போது அணியில் சேர்க்கப்பட்டார்.
அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி எல்லாவகையான போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா விளையாடுவதை எந்த அணியும் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.