கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.
தமிழகத்தில் பல, மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. அதனையடுத்து இதனை சமாளிப்பதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா நிதி கொடுத்து உதவ அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
அதனையேற்று திரை பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை நித்தி அகர்வால் கொரோனா நிவாரண நிதியாக 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.