இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
அண்மைக்காலமாக திரை பிரபலங்கள் பலர் கொரோனா தொற்றால் பாதித்து வருகின்றன. அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். என்னுடையை ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.