சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக பாடகர் பென்னி தயாள் விலக முடிவு செய்துள்ளார்.
![சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறாரா பென்னி தயாள்? என்ன நடந்தது? - தமிழ் News - IndiaGlitz.com](https://1847884116.rsc.cdn77.org/tamil/home/benny140821_1.jpg)
மேலும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் தான் இருக்க மாட்டேன் என பாடகர் பென்னி தயாள் அறிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ‘சூப்பர் சிங்கர்’ எனும் ரியாலிட்டி ஷோவின் எட்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி சரண், பென்னி தயாள் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் கடந்த சில சீசன்களாக நடுவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியிலிருந்து ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இது தொடர்பாக பலரும் நடுவர்களைக் கடுமையாகச் சாடி பதிவிட்டு வந்துள்ளனர். இதனால் இந்நிகழ்ச்சியிலிருந்து விலக பென்னி தயாள் முடிவு செய்துள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் பென்னியின் சமீபத்திய பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெறுக்கத்தக்க செய்திகளை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது, எனக் குறிப்பிட்டிருக்கும் அவர் அடுத்த சீசனில் இருந்து சூப்பர் சிங்கரில் இடம்பெற மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.