நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருகிறது.
நெய்வேலி என்எல்சி-ன் ( NLC) 2வது சுரங்கப் பகுதியில் இதன் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு வந்த வருமான வரித்துறை அதிகரிகள் விசாரணைக்காக விஜயை அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கேரவனிலேயே விசாரணை மேற்கொண்டனர்.
திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆன்ட்ரியா, அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இதே போல் ‘பிகில்’ படத்தை தயாரித்த AGS சினிமாஸ் நிறுவனத்தின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. பிகில் திரைப்படத்தில் விஜய் பெற்ற சம்பள விவரங்கள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் கேட்தாக கூறப்படுகிறது.
சென்னையில் சினிமா தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தினர். இவர் தான் பிகில் திரைபடத்திற்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்படுகிறது.