கேரளாவின் ஸ்நேக் மாஸ்டர் என அழைக்கப்பட்டவர் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் பாம்பு பிடிப்பதில் பிரபலமானவர் வாவா சுரேஷ். ஊருக்குள் எங்கு எந்த பாம்பு வந்தாலும் சுரேஷ் தான் பிடிப்பார்.
இவர் இதுவரை 176 ராஜ நாகங்கள் உட்பட 50 ஆயிரம் பாம்புகள் வரை பிடித்துள்ளார். அவரது திறமையை கண்டு வியந்த இங்கிலாந்து இளவரசன் பிரின்ஸ் சார்லஸ் அவரை நேரில் சந்தித்து சென்றுள்ளார்.
இந்நிலையில் பத்மநாபபுரம் அருகே வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த சுரேஷ் அதனை மக்களிடம் காட்ட முயற்சிக்கையில் எதிர்பாராதவிதமாக பாம்பு சுரேஷை தாக்கியது.
உடனடியாக அவரிடம் இருந்த மருந்துகளை கொண்டு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 72 மணி நேர கண்காணிப்பில் உள்ளார். இதற்கு முன்னால் சுரேஷை 2 முறை பாம்பு தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.