இந்தியாவில் பிரபலமான அட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/1-500x500.jpg)
டெல்லி ஹௌரங்கசீப் பேன் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் கபூர். இவர் 70 ஆண்டுகள் பழமையான அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். தன் மனைவி நடாஷா கபூருடன் அங்கு வசித்து வந்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/ss-3.jpg)
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சாப்பிட நடாஷா கபூர் வராததால் குடும்பத்தினர் அவரை தேடி அவரது அறைக்கு சென்றனர். அவர்களுக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மின்விசிறியில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்திருந்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/s.jpeg)
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் நடாஷா கபூர் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/AdobeStock_149932098-1024x768-1-1024x768.jpeg)
இதில் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது தற்கொலை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.