இந்தியா

வாழ்க்கையில் விரக்தி : ‘அட்லஸ் சைக்கிள்’ அதிபரின் மனைவி எடுத்த விபரீத முடிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் பிரபலமான அட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஹௌரங்கசீப் பேன் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் கபூர். இவர் 70 ஆண்டுகள் பழமையான அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். தன் மனைவி நடாஷா கபூருடன் அங்கு வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சாப்பிட நடாஷா கபூர் வராததால் குடும்பத்தினர் அவரை தேடி அவரது அறைக்கு சென்றனர். அவர்களுக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மின்விசிறியில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்திருந்தார்.

ALSO READ  கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்..

இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் நடாஷா கபூர் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

இதில் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது தற்கொலை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மிகப்பெரிய காற்றாலை இறகினை கையாண்டு வஉசி துறைமுகம் சாதனை..

naveen santhakumar

பிரியங்கா காந்தியின் தமிழக பிரச்சாரம் ரத்து !

News Editor

தினமும் 40 சப்பாத்திகள் பத்து தட்டு சாப்பாடு உண்ணும் 23 வயது இளைஞரால் விழி பிதுங்கி நிற்கும் கொரோனா தனிமை மையம்..

naveen santhakumar