இந்தியா

ஜூன் 8 முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட் திறப்பு: புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

ஜூன் 8-ம்தேதி முதல் மால்கள், ஓட்டல்கள், வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, இன்று அதுதொடர்பான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருக்கும் ஷாப்பிங் மால்களைத் திறக்க அனுமதியில்லை. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு வெளியே இருக்கும் மால்களை மட்டுமே திறக்கலாம்.

மால்களுக்குள் வரும் அனைவரும் கண்டிப்பாக தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட வேண்டும். மாலுக்கு வருவோருக்கு சானிடைசர் வழங்க வேண்டும். 

கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ஷாப்பிங் மால்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். 

ஷாப்பிங் மால்களில் பணியாற்றுவோர், கடை வைத்திருப்போர், பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் இல்லாமல் யாரையும் அனுமதிக்கக் கூடாது. 

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகள், சுவரொட்டிகள் ஆங்காங்கே இடம் பெற வேண்டும். ஒலிபெருக்கி, வீடியோ மூலம் அவ்வப்போது விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும். 

ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகளுக்குள் செல்லும் மக்கள் சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். 

வாகனங்களை நிறுத்தும் இடங்களில் கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாகனங்கள் வருவதற்குத் தனி நுழைவாயிலும், செல்வதற்குத் தனி நுழைவாயிலும் இருக்க வேண்டும். 

வீடுகளில் பொருட்களை வழங்கும் பிரிவில் பணியாற்றுவோருக்கு தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனை செய்தபின் அவர்களை டெலிவரி செய்ய அனுப்பி வைக்க வேண்டும். 

எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தும்போது, கூட்டமாக மக்கள் செல்லாமல் இடைவெளியுடன் மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். அதாவது ஒரு படி விட்டு மற்றொரு படியில் 2-வது நபர் நிற்குமாறு சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். 

ALSO READ  என்.ஐ.ஏ சோதனை: கேரளாவில் போராட்டம்?

குளிர்சாதன வசதியுள்ள கடைகளில் 24 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்குமாறும், ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம் வரை இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். 

ஷாப்பிங் மாலுக்கு வரும் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும். 

மக்கள் அதிமாகத் தொடும் பொருட்களான கதவுகளின் கைப்பிடிகள், லிஃப்ட் பட்டன்கள், எஸ்கலேட்டர் கைப்பிடிகள், இருக்கைகள், ஓய்வறைகள் போன்றவற்றை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 

கழிவறைகளைக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும். 

உணவகங்களில் உள்ள இருக்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் வாடிக்கையாளர்கள் அமராத வகையில் பராமரித்து சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்வதும் போதுமான அளவு இடைவெளிவிட்டு இருத்தல் வேண்டும். 

உணவகங்களில் பணியாற்றுவோர் முகக்கவசம், கைகளுக்குக் கையுறை போன்றவர்றை அணிந்து பணியாற்ற வேண்டும். 

மால்கள், வழிபாட்டுத் தலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

ஓட்டல்கள் வாடிக்கையாளர்களின் பயண குறிப்பேட்டை பத்திரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பயணிகளின் லக்கேஜ்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். 

இதன்படி மால்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை பதிவு செய்தல், வழிபாட்டுத் தலங்களில் சிலைகளை தொடக்கூடாது  என்பது உள்ளிட்ட விதிகள் கடைபிடிக்க வேண்டும்.

மத்திய  அரசு வெளியிட்டுள்ள இந்த தளர்வுகளும், விதிமுறைகளும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ  சிறுவனின் உயிரை பறித்த 'ஃபயர்வால்' கேம் ! 

மால்கள், ஓட்டல்கள், வழிபாட்டுத் தலங்களில் வெப்பநிலை மானிகளைப் பயன்படுத்திய காய்ச்சல்  சோதனை நடத்தப்பட வேண்டும்.

அடிக்கடி தொடுதலுக்கு உள்ளாக்கப்படும் கதவுகள், கைகழுவும் பகுதி உள்ளிட்டவை தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 

உணவு விடுதிகளில் முடிந்தவரை உணவை பார்சலாக கொண்டு செல்வதற்குத்தான் உணவகங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

உணவு டெலிவரி செய்வோர் ஒவ்வொரு டெலிவரிக்கு முன்பாகவும் வெப்பநிலைமானி கொண்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். 

ஷாப்பிங் மால்களில் குழந்தைகள் விளையாடும் பிரிவு, திரையரங்கம் தொடர்ந்து மூடப்பட வேண்டும். 

ஷாப்பிங் மால்களில் பொருட்கள் வாங்கும்போது டிஜிட்டல் பரிவர்த்தனையை வாடிக்கையாளர்களிடம் கடை உரிமையாளர்கள் ஊக்கப்படுத்தலாம். 

ஷாப்பிங் மாலில் யாருக்கேனும் ஒருவருக்கு கொரோனா இருப்பது அறிகுறி மூலம் தெரியவந்தால் அவரைத் தனிமைப்படுத்தி, மாவட்ட மருத்துவமனை, அல்லது மருத்துவ உதவி எண்ணுக்குத் தகவல் அளிக்க வேண்டும். 

அந்தக் குறிப்பிட்ட நபருக்கு கொரோனா இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டால் அவர் வந்து சென்ற இடத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் ஷாப்பிங் மால்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்படுகிறது. 

ஷாப்பிங் மால்களுக்கு வருவோர் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மால்கள், ஓட்டல்கள், வழிபாட்டுத் தளங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் திரையரங்குகள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம், சிறுவர்களுக்கான கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை பூட்டியே இருக்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க முடியும்- யுஜிசி அறிவிப்பு..

naveen santhakumar

புதிய சிக்கல் மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமா..

naveen santhakumar

குடியரசு தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் !

News Editor