மும்பை:-
கண் பார்வையை இழந்திருந்த மூதாட்டி, கொரோனா தடுப்பூசி போட்டப்பிறகு பார்வை பெற்ற அதிசயம் மஹாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் தடுப்பூசி பற்றி பல தவறான கருத்துகள் மக்களிடையே பரவி வருவதால், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சுணக்கம் நிலவுகிறது.
எனினும், 2வது அலை ஏற்படுத்திய பாதிப்பால் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒருசிலருக்கு சில பொதுவான பக்கவிளைவுகள் சிலருக்கு ஏற்பட்டிருந்தாலும், வேறு எந்தவித பாதிப்பையும் தடுப்பூசியால் ஏற்படுவதில்லை.
இந்நிலையில், கண்பார்வை இழந்த ஒரு மூதாட்டி தடுப்பூசி போட்டப்பிறகு பார்வையை பெற்றுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி மதுராபாய் பித்வே. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டு இரு கண் பார்வையையும் இழந்துள்ளார்.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்ட அவருக்கு தற்போது கண் பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.