தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. , ஆண்டு முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் மகளிர் தினம் பெண்மையைப் போற்றும் விதமாக மட்டுமில்லாமல், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களின் சாதனையைக் கொண்டாடும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், “சர்வதேச மகளிர் தினத்தன்று நமது மனவுறுதிமிக்க பெண் சக்திக்கு வணக்கம் செலுத்துகிறேன். நம் தேசத்தைச் சேர்ந்த பெண்களின் பல சாதனைகளில் இந்தியா பெருமை கொள்கிறது. பரந்த அளவிலான துறைகளில், பெண்கள் மேலும் அதிகாரம் பெறுவதற்கு உழைக்கும் வாய்ப்பை பெறுவது நமது அரசாங்கத்திற்கு கிடைத்த கௌரவம்” எனக் கூறியுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.