தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்த வகையில் போடிநாயகனுர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக மீண்டும் போட்டியிடும் அமைச்சர் பன்னீர்செல்வம் பழனிசெட்டிபட்டிபகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பெண்கள் மற்றும் ஏழைகளுக்காக அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த கால தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றியதாக கூறினார். மேலும் தற்போது அதிமுக அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சி காலத்தில் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.