சேலம் அருகே வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயமடைந்தனர். 4 வீடுகள் தரைமட்டமானது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி பாண்டுரங்க நாதர் தெருவில் வசித்து வருபவர் கணேசன். இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் இவரது இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துட வெடித்து சிதறியுள்ளது.
இதனால், அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தது. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
எனினும், இந்த விபத்தில் ராஜலெட்சுமி (70) என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் கணேசன், கோபி, தீயணைப்பு அலுவலர் பத்மநாபன், வெங்கட்ராஜன் ஆகியோரது வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர்.