தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திருச்சிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயணியின் உடமையை சோதனை செய்த போது அவரது கைப்பையில் ஒரு சுத்தியல் இருப்பதை கண்டனர்.
பின்னர் அந்த சுத்தியலை சோதனை செய்தனர். அப்போது சுத்தியலின் நடுப்பகுதியில் 200 கிராம் தங்கத்தை நூதன முறையில் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.94 லட்சம் என கூறப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.