தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரக்கூடிய நிலையில் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 734 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்தை தாண்டி உள்ளது.இதுவரை 32,543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 442 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.