தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மது விற்பனை வெகுவாக சரிந்துள்ளது என ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மது விற்பனை மிகவும் சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. மதுக்கடைகள் சரியாக திறக்கவில்லை என்றும் அது மட்டுமின்றி பல மதுக்கடைகளில் மழைநீர் தேங்கியுள்ளது என்பதால் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
கடந்த 15 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பவை 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாம். பல கடைகளில் மழை வெள்ள நீர் புகுந்ததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
அதே போல் மழை காலம் என்பதால் பீர் வகைகள் விற்பனை சரிந்து உள்ளதாகவும் சராசரி விற்பனை விட 60 சதவீதம் குறைவாக பீர் விற்பனை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது கூட, அதன் நடுவே நின்று ‛கட்டிங்’ போட்ட மதுபிரியர்கள், கனமழையில் டாஸ்மாக் மதுபானத்தை தவிர்த்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான். பொதுவாக மழை காலம் என்றால், இதமாக ஒரு ‛கட்டிங்’ போடுவோமா என்பவர்கள் மழைக்கு பயந்து டாஸ்மாக் பக்கம் செல்லாமல் இருக்கிறார்கள் என்பது புதுசு தான்.