இந்தியா தமிழகம்

நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் வருகின்ற வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேங்கும் மழைநீரை வெளியேற்ற நிமிடத்திற்கு 4,200 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறன் கொண்ட நீரில் மூழ்கக்கூடிய மோட்டார் பம்பு புதியதாக பொருத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் நிமிடத்திற்கு 7,500 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறனுடன் இருந்த மோட்டார் பம்புகளின் செயல்திறன், தற்போது கூடுதலாக பொருத்தப்பட்ட மோட்டார் பம்பின் மூலம் நிமிடத்திற்கு 11,700 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும், மேலும் மழைக்காலங்களில் மின்தடை ஏற்பட்டால் இந்த மோட்டார் பம்புகளை இயக்க ஏதுவாக 62.5 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டரும் நிறுவப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட ஸ்டாலின் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம், ஒரு ஓட்டுகூட வாங்காத  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்…

News Editor

நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி

naveen santhakumar

கடற்கரையில் மணல் சிற்பம்; அமிதாப்பச்சன் சிலைக்கு வழிபாடு- அமிதாப் நலம்பெற ரசிகர்கள் வேண்டுதல்… 

naveen santhakumar