தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.
அதன்படி மருந்துக்கடைகள் பால் விநியோக கடைகள், பெட்ரோல் பங்க் தவிர்த்து இதர கடைகள் அனைத்தும் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது. பேருந்துகளிலும் ரயில்களிலும் 50 சதவிகிதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளித்துள்ளது.
அதன் பொருட்டு இன்று கோவையில் 12 மணி வரை செயல்பட்டு வந்த இறைச்சி கடைகள் மளிகை கடைகள் இதர கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பெரிய பெரிய ஜவுளிக் கடைகள் நகைக் கடைகள் ஆகியவை காலை முதலே மூடப்பட்டிருந்தன.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.