தமிழகம்

சேலத்தில் வெறிச்சோடிய வீதிகள்; புதிய கட்டுப்பாடுகள் அமல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரானா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி காய்கறி கடைகள் மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்றும் அதற்கு மேல் இயங்கு வதற்கு அனுமதி இல்லை என அறிவித்திருந்தது. மேலும் பால் குடிநீர் மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று அரசு அறிவித்த நேரத்திற்கு முன்பே கடைகள் அனைத்தும் வியாபாரிகள் தாமாக முன்வந்து அடைத்தனர். சேலத்தில் உள்ள மளிகை கடைகள் வர்த்தக நிறுவனங்கள் துணிக்கடைகள் மற்றும் பூ மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் சேலம் மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

ALSO READ  நாளை ஊரடங்கு தளர்வு இல்லை தமிழக அரசு அறிவிப்பு…

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சின்ன கடை வீதி மக்கள் நடமாட்டம் இல்லாத கடை வீதியாக மாறி உள்ளது இதேபோல் சேலம் மாநகரில் லீபஜார் செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கடைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.

கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்றால் ஓவியர் இளையராஜா மறைவு…! 

naveen santhakumar

இடைவிடாது கொட்டி தீர்த்த மழை- விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி !

News Editor

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதி கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Admin