விஜிபி உலக தமிழ் சங்கம் சார்பில் வட அமெரிக்க தமிழ் சங்கத்திற்கு 60 திருவள்ளுவர் சிலை கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஜிபி குழும தலைவர் விஜி. சந்தோசம் ,திராவிடர் கழகத் தலைவர் வீரமணி , கவிப்பேரரசு வைரமுத்து வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி மற்றும் இயக்குனர் மற்றும் நடிகருமான பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, மேடைகளை தவிர்த்து வரும் இந்த காலச் சூழ்நிலையில் அன்பிற்காகவும் அறிவிற்காகவும் மட்டுமே இன்று கூடியிருக்கிறோம் ஏன் எனில் திருக்குறளின் ஆற்றல் அளப்பரியது என்றார். பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளை பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டிப் பேசி வருகிறார். அவர் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவது ஒட்டுமொத்த தமிழனினமும் பெருமை கொள்கிறது .
பிரதமர் நரேந்திர மோடி உண்மையாகவே திருக்குறளை வாசிப்பவராக இருந்தால், திருக்குறளை நேசிப் பவராக இருந்தால் திருக்குறளின் பொருள்களை அறிந்தவராக இருந்தால் திருக்குறளை தேசிய மொழியாக அறிவியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#vairamuthu #Thirukural #TamilThisai #NarendraModi #Thiruvalluvar #ThiruvalluvarStatues #TamilNadu #Tamil